ஆரோக்கியம்
முன்னுரை
வாழ்வில் சுகத்தைத் தேடும் முயற்சியில் எல்லோரும் ஈடுபட்டனர்.
இவற்றுள் பாரதீய வழிமுறை அடிப்படையானதும் தாக்கம் ஏற்படுத்துவதாயும் உள்ளது. சுகம்
வெளிப்பொருட்களை எதிர்பார்த்து அமைவதல்ல; நம் மனநிலையைப் பொருத்தது என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனதின் சமநிலை, உறுதியான நிலை சுகத்தைப் பெற உதவிகரமாய் இருக்கும்.
உறக்கம், மன அலைச்சல் இந்த இரண்டு நிலைகளும் மனத்தை ஒருமுகப்படுத்தும்
முயற்சிக்கு இடையூறாக இருக்கின்றன. யோகத்தின் மூலமாக இத்தகைய அலையும் மனதை உறுதிப்பட
செய்து நிரந்தர சுகத்தை அடைய முடியும்.
இந்த யுகத்தை விஞ்ஞான யுகம் என்றும் தொழில்நுட்ப யுகம் என்றும்
கூறுகிறார்கள். விஞ்ஞானத்தின் புதிய கண்டு பிடிப்புகளினால். வாழ்க்கையில் பல விதமான
வசதிகள் கிடைத்துள்ளன. வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமான நிலையில் உள்ளது. ஆனால். வாழ்க்கையில்
ஒரு வகையான இயந்திரகதியும் போலித்தனமும் அதிகரித்து வருகிறது. அதனால் மனிதன் எப்பொழுதும்
அமைதியிழந்து ஒரு பதட்ட நிலையில் இருக்கிறான். விஞ்ஞான தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள
நாடுகளில் இது அதிகமாகியுள்ளது. இந்த வேதனையிலிருந்து விடுபட பலர், போதைப் பொருட்களையும்.
மயக்க மருந்துகளையும் உபயோகிக்கிறார்கள். ஆனால் இந்த போதைப் பொருட்களும், மயக்க மருந்துகளும்
அவர்களுக்கு கானல் நீராக மாறி, அவர்களது உடலுக்கும் மனதுக்கும் பல விபரீத விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில். உலகத்திலுள்ள பலவகை தரிசனங்களையும். தத்துவ ஞானங்களையும்
நோக்கி மக்கள் கவரப்படுகிறார்கள். அவைகளுள் பாரதத்தின் 'யோக' தரிசனம் மிகுந்த
முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
யோகம். மேலே கூறிய 'உண்மையைத்
தேடிச் செல்வோர்க்கு' வரப்பிரசாதமாக அமைந்தது மட்டுமல்லாமல், சாதாரண மனிதர்களுக்கும்
உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு சுலபமான. இயல்பான வழியாகத்
தென்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த யோகம் என்னும் விஷயம் பற்றி அஞ்ஞானத்தின் காரணமாக சில தவறான
கருத்துக்கள் மக்கள் மனதில் இருப்பது தெரிகிறது. அவற்றைப் போக்குவது அவசியமாகிறது.
இந்த ஆரோக்கியம் தலைப்புகளில் வரும் கட்டுரைகள் மனதின் ஆரோக்யத்தை மையமாகக் கொண்டு
பல கட்டுரைகள் எழுதப்படும். குறிப்பாக ஆரோக்கியம் தரும் விசயங்கள், யோகாசனம்,
தியானம், நல்ல குணநலன்கள் போன்ற பலவற்றை கருத்தில் கொண்டு எழுதப்படுகிறது.
படித்துப் பயன் பெற பொறியான் வலைத்தளம் சார்பாக வாழ்த்துகளையும் வணக்கங்களையும்
தெரிவித்து கொள்கிறோம்.