மருத்துவம்
முன்னுரை:
நான் கற்றதையும், கண்டறிந்தவைகளையும் இவ்வுலகம் பெற்று உய்தல் வேண்டுமெனக் கருத்தில் கொண்டு கட்டுரைகளை எழுதியுள்ளேன். மேலும் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் நல்ல ஆரோக்யத்திடனும், உடல் அமைப்புடனும், ஆரோக்ய சிந்தனைகள், தெளிவான குறிகோள்கள், மகிழ்ச்சியான மன நிலைகள் பரவ வேண்டும் என்ற பொது நலத்துடனும் எழுதுகிறேன். ஆகவே இந்த வலைதளங்களில் ஆரோக்கியம், மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆன்மீகம் போன்ற தலைப்புகளில் நல்ல தகவல்களை அனைவரும் பார்த்து படித்து பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுவை ஆகும். குறிப்பாக இந்தக் கட்டுரைகளில் ஓமியோபதி சிகிச்சையும், லூஸ்ஸர் பயோ மருத்து சிகிச்சையும், மலர் மருந்துகள் கொடுத்து பயன் பெற்றதையும், மியாசத்தைப் பற்றியும், நோய் நாடலையும் விவர்த்திருப்பது நன்மை பயப்பதாகும். மருந்துகளின் உறவுகளைத் தனித் தனியாக விவரித்திருப்பது பயனுள்ளதாகும். நோபைத் தடுப்பதற்குரிய மருந்துகளைப் பற்றி இயம்புவது மிகவும் பொருத்தமான பகுதியாகும். இது மருத்துவ உலகிற்கும், தமிழுக்கும் என்னால் முடிந்த சிறு சேவையின் பகுதியாகக் கருதுகிறேன்.
நோயின் தோற்றத்தையும், காரணத்தையும், நோயை நீக்கும் வழிமுறைகளையும் ஆய்ந்து மருத்துவம் செய்தல் வேண்டும் என்பது வள்ளுவப் பெருமானின் அழியா வாக்காகும். ஓமியோபதி மருத்துவமும் அந்த அடிப்படையைக் கொண்டதே யாகும்.
நாற்பது ஆண்டுக்கால மருத்துவ அனுபவம் கொண்டவர்கள் தன்னை நாடிவந்த பிணியாளர்களுக்கு பணி செய்த வகையில் அடைந்த அனுபவங்களைப் பிறரும் படித்து நலம் பெறவேண்டும் என்ற மன உந்துதலால், இந்த கட்டுரைகளை “பொறியான்” வலைத்தளம் மூலமாக விவரமாகவும் தெளிவாகவும் எழுதலானேன். எனக்கு ஏற்கனவே ஆக்கமும் ஊக்கமும் ஊட்டிய தமிழுலகம் இந்தக் கட்டுரைகளையும் வரவேற்றுத் துணைபுரிய வேண்டுகின்றேன்.
வணக்கம்.