சித்த
மருத்துவம்
முன்னுரை:
அறிவியல் வளர்ச்சி என்ற பெயரால் மனிதனின் அடிப்படைத்
தேவைகள். சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் சீர்குலைந்து மனிதனை நோயாளியாக மாற்றிக்
கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இயற்கையோடு இணைந்த இந்த எளிய வைத்திய முறைகளை
இச்சிறு கட்டுரையின் மூலம் ஒவ்வொரு நோய்க்கும் பலவிதமான மருந்து முறைகளைத்
தொகுத்து எழுதியுள்ளேன். நோய் ஒன்றுக்கு நோயின் காரணமும். அதனை நீக்கும் வழியாக
பலவிதமான மருந்துகளை தொகுத்து எழுதியுள்ளேன்.
விண்ணை விஞ்சும் விஞ்ஞானம் உருவாகி மனிதனை
மயக்கினாலும். ஆடம்பரம் இல்லாத இயற்கை சூழலில் மெய் ஞானத்தில் மனிதன் தெளிவாகவும்.
மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தான் என்பதற்கு.
"மருந்து
என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உனின்" என்ற குறள் மூலமாகவும், "மிகினுங்
குறையினு நோய் செய்யுதுவோர் வளிமுதலா வெண்ணிய மூன்று." என்ற குறள் மூலமாகவும்.
திருவள்ளுவர் காலத்திற்கும் முன்பே நம் நாட்டில் எப்படிப்பட்ட நோயையும்
அதிசயத்தக்க வகையில் இயற்கை மூலிகைகள் மூலம் குணப்படுத்துவதற்கு சித்த மருந்துகள்
உதவுகிறது.
மருத்துவ முறைகளில் பல்வேறு விதமான நோய் தீர்க்கும்
முறைகள் தோன்றினாலும். நான்கு யுகங்களுக்கு முன்பே வாழ்ந்த சித்தர்கள் மூலம்
அறிந்ததும். முதலில் தோன்றியதுமான சித்தர் தமிழ் மருத்துவமே மிகவும் பழமையானதும்
மேன்மையானதும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
சித்தர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகைகளின் பயன்களை
அடைவதற்கு நாங்கள் சிறப்பான வழிகாட்டியாக கட்டுரையை எழுதி இருக்கிறோம். சித்தர்கள்
நமக்கு வழங்கிய சித்த வைத்திய மூலிகைகளை நாம் பயன்படுத்துவதன் மூலம் நோய் வராமல்
தடுக்க முடியும். நமது மூலிகைகளை சாப்பிடுவதனால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
காலை 9
மணிக்குள் முழு உணவு சாப்பிடுங்கள். மதியம் 3 மணிக்குள் முக்கால் பங்கு அளவு உணவு சாப்பிடுங்கள்.
இரவு உணவு 3 பழம், அரை
முடி தேங்காய் மட்டும் சாப்பிடுங்கள், உடல் ஆரோக்கியமாக வாழ உணவு முறைகளை சரியாக அமைத்துக்
கொள்ளுங்கள்.
மருந்து
உண்ணும் முறை
1. மூலிகைகளை
பவுடராக்கி துணியில் வைத்து சலித்து வஸ்திரகாயம் (300 மெஸ்) வரை மிக நைஸ் பவுடராக்கி சாப்பிட வேண்டும்.
2. சித்த
மருந்துகளை நைஸ் பவுடராக ஆக்கி சாப்பிடும் போது முழு பலன் கிடைக்கிறது.
3. வஸ்திரகாயம்
சிறிய பாத்திரத்தில் துணியை மூலிகை பவுடரை அதன் மீது வைத்து தேய்த்து மிக நைஸ்
பவுடராக சலிக்க வேண்டும்.
4. இப்போது
எல்லா மருந்து வகைகளும் கடைகளில் பவுடராக கிடைக்கிறது. அந்த மூலிகை பவுடரை வாங்கி
துணியில் சலித்து அதன் பின் உபயோகிக்கவும்.
5. தேவைக்கு தகுந்தபடி அரை தேக்கரண்டி
மூலிகை பவுடரை தேனில் கலந்து அல்லது மூலிகை சாப்பிட்டு வெத்நீர் குடிக்க வேண்டும்.
சாப்பிடவும். ரைஸ் பவுடரை மட்டுமே உடம்பு ஏற்றுக் கொள்கிறது. ஆகவே நைஸ் பவுடராக்கி
சாப்பிடுங்கள்.
6. சவித்த
கப்பி பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கி கொள்ளவும். மீதி உள்ள பவுடரை
கஷாயம் செய்து சாப்பிடுங்கள்.
ஏரானமானவர்கள் சித்த மருந்து, மூலிகை
மருந்துகள் பயன்படுத்தி பயன் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இது கட்டுரைகள்
எழுதப்படுகிறது.
நன்றி!